12 கட்சிகள், 2 சுயேட்சைகள் அதிபர் தேர்தலில் போட்டி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 12 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாக, 12 அரசியல் கட்சிகள் எழுத்து மூலம் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளன.

அத்துடன், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, போட்டியிட விரும்பும் கட்சிகளை முன்னரே தகவல் தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது

.* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!