ஸ்பெயின்: கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு

ஸ்பெயினில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் லாஸ் அல்காஸாரஸ் (Los Alcazares) நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளாதால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளநீர் வடியாததால் கார்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆங்காங்கே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மருத்துவக் குழுவினர் விரைந்து செயலாற்றி வருவதாக லாஸ் அல்காஸாரஸ் நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!