கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர் – சரத் பொன்சேகா

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட வீரர்களிற்கு உரிய இடத்தை வழங்கியுள்ளது என அமைச்சர் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள சரத்பொன்சேகா கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதம் செயற்படும் முறை குறித்து தெரியாது அவர் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகளை விடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ச மக்களை தூண்டிவிடப்பார்க்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அதனை செய்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!