நண்பணிடம் பந்தயம் கட்டி பெண்ணிடம் அத்துமீறியவன் கைது!

புதுச்சேரியில் குடிபோதையில் நண்பணிடம் பந்தயம் கட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவனை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமையன்று புதுச்சேரி ரெயின்போ நகரில் ஆளரவம் அற்ற பாதையில் நடந்து சென்ற வடமாநில பெண் ஒருவரை 2 இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததோடு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடமும் வாட்சப் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கிரண்பேடியின் உத்தரவின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து மொட்டத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் நண்பணிடம் பந்தயம் கட்டி இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!