கோத்தாவை அப்பாவி என்றாராம் ஐ.நா பிரதிநிதி!

ராஜபக்ச குடும்பத்திலேயே, தானே மிகவும் அப்பாவியான நபர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கரும் இதனை தெரிவித்திருந்தார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

தாம் கொடூரமான மனிதர் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும் தமது குடும்பத்திலேயே தாமே மிகவும் அப்பாவியான நபர் என மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது குறிப்பிட்டதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாம் எவ்வளவு அப்பாவி என்பதனை தமது சகோதரர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடன் அரை மணித்தியாலப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களை கொடூரமான நபர் என சிலர் கூறிய போது நீங்கள் அவ்வாறு இல்லை என்பது புரிகின்றது என ஹானா சிங்கர் கூறிச் சென்றார் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!