அடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார்.

இதற்காக அவர், வரும் 28ஆம் நாள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாவட்டங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வையிட்டு, அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் செயலகப் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!