பலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா நாளை நடக்கவுள்ள நிலையில், எயர் இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமானம் ஒன்று நேற்று பலாலி விமான நிலையத்தில் பரீட்சார்த்தமாக தரையிறக்கப்பட்டது.

எயர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள், ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம், சமிக்ஞை மற்றும் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பரீட்சார்த்தமாக இந்தப் பயணத்தை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து வந்த ATR 72-600 விமானமே நேற்று பலாலி ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நாளை விமான நிலைய திறப்பு விழாவின் போது, சென்னையில் இருந்து வரும், அலையன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் என்றும் ததகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!