நாம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை வழங்க முற்படும்போது அது பெரும்பான்மையினத்தவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசி யல் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது மஹிந்த ராஜபக் ஷ மூலம் மாத்திரமே கிடைக்கும். அப்போது தான் பெரும்பான்மை மக்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டால் கட்டாயம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வலுவடை யச் செய்வதோடு அவர்களின் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ போட்டி யிடுகின்றார்.
இந்நிலையில் இது தொடர்பில் பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.
அச் செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி: பொதுஜன பெரமுனவின் ஜனாதி பதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷ களமிறங்குகிறார். அந்தவகையில், பொது ஜன பெரமுனவின் சார்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டங்கள் எவ்வாறுஅமைந்துள்ளன?
பதில்: பொதுஜன பெரமுனவின் ஜனாதி பதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு பல்லேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தவுள்ளார். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்தனர். இதனடிப்படையில் அவர்கள் தமிழர்களுக்கு அனைத்து தீர்வுகளையும் வழங்குவோம் என்று ஆட்சிக்கு வந்தனர். இந்நிலையில் அவர்களால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினை அரசியல் தீர்வாகும். அதைப்பெறுவதற்கு தான் தமிழர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தனர்.
அதேவேளை, கிழக்கு தமிழ் மக்களுக்கும் பிரச்சினையுள்ளது, மலையக தமிழ் மக்களுக்கு வீட்டுப் பிரச்சினை மற்றும் சம்பளப் பிரச்சினையுள்ளது. கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக வந்தால் தீர்க்க வேண்டிய முதலாவது பிரச்சினையாகவுள்ளது பொருளாதாரப் பிரச்சினை. ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை நோக்குகின்ற மக்கள் உள்ளனர். அந்தவகையில், கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்து பொருளாதார பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.
அதன் பின்னர் தமிழர் பிரதேசங்களில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக கிளிநொச்சி பிரதேசத்தை எடுத்துக்கொண்டால். பிரதான வீதிகள் அனைத்தும் காப்பட் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படாமலுள்ளன. அத்தோடு குடிநீர்ப்பிரச்சினை இவ்வாறு பல அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.
அந்தவகையில் தமிழ் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை முதலில் வலுப்படுத்திக்கொண்டு அவர்களின் பிரதேசங்களில் அபிவிருத்திகளை முன்னெடுத்ததன் பிற்பாடே அரசியல் தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வுத்திட்டங்களை வழங்க வேண்டும்.
தற்போது 13 ஆவது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. அது குறி த்து நாம் பேசி எவ்வாறு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயமுடியும்.
நாம் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவில்லை. இருப்பினும் அவர்கள் கேட்பதை தற்போது எம்மால் போலிக்காக செய்யமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி நாம் சமஷ்டி முறையில் தீர்வுத்திட்டங்களை வழங்க முன்வந்தால் அது பெரும்பான்மை மக்களிடத்தில் குழப்பத்தை உருவாக்கலாம்.
இதேவேளை, நாம் தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டத்தை வழங்க முற்படும்போது அது பெரும்பான்மையினத்தவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாத விதத்தில் வழங்க வேண்டும். இதேவேளை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது மஹிந்த ராஜபக் ஷ மூலமே கிடைக்கும். அப்போது தான் பெரும்பான்மை மக்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவும் தமிழர்களுக்கான தீர்வுகளுக்காக 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாட முடி யுமென தெரிவித்துள்ளனர். அது சிறந்த தொரு விடயமாகும் என நினைக்கின் றேன்.
கேள்வி: கோத்தபாய ராஜபக் ஷ மீது பல கருத்துக்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் மக்கள் அவர் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது?
பதில்: கோத்தபாய ராஜபக் ஷவை மிக வும் பயங்கரமானவராகத்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர் சித்தரிக்கின்றனர். கடந்த காலங்களில் வெள்ளை வேனில் ஆட்களை கடத்துவதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களையோ அல்லது வேறு எவராவதோ வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளார்களாவென நாம் 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கோள்யொன்றை எழுப்பியிருந்தோம்.
அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையென பாதுகாப்பு அமைச்சு இதற்கு பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிப்பது முற்றிலும் பொய்யானது. லசந்த விக்கிரமதுங்கவின் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. அது தொடர்பில் எங்குமே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இதெல்லாம் பொய்யானதே.
கோத்தபாய ராஜபக் ஷ இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர் அல்ல. யுத்தகாலத்தில் கோத்தபாய ராஜபக் ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டார். தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அவர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளார். இந்நிலையிலேயே வடக்கில் மாகாண சபை தேர்தல், பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றன. கோத்தபாய ராஜபக் ஷ இராணுவ வீரர் என்றால் ஏன் அவர் தேர்தல்களை நடத்த உதவவேண்டும். இல்லாவிட்டால் அவரால் இராணுவத்தினரை வைத்து வடக்கை கட்டுப்படுத்தியிருக்க முடியும் அல்லவா? யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்ததுடன் உடனடியாகவே ஜனநாயகத்தை கொண்டு வந்தோம். அது மட்டுமல்ல கோத்தபாய ராஜபக் ஷ தமிழ் மக்களுக்கு மட்டுல்லாது முழு நாட்டுக்குமே பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
கிளிநொச்சியின் அபிவிருத்தி எவ்வாறு இடம்பெற்றது. இராணுவத்தினரை ஈடுபடுத்தியே கிளிநொச்சி நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டது. அதற்கு கோத்தபாய ராஜபக் ஷவே தலைமை வகித்து அந்த அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அது மட்டுமல்ல கொழும்பை இவ்வளவு அழ கான முறையில் அபிவிருத்தி செய்தது கோத்தபாய ராஜபக் ஷவே. இந்நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ மீது ஏனையோர் வீண்பழிகளை சுமத்துகின்றனர்.
கோத்தபாய ராஜபக் ஷ சொன்னால் செய்வார். செய்வதையே சொல்லுவார். அவர் தமிழ் மக்களுக்கு தேவையானதை வழங்கும் போது சொல்லுவார். ஏனைய அரசியல்வாதிகள் பல தீர்வுப்பொதிகளை வழங்குவதாக சொல்லுவார்கள் ஆனால் அவற்றை செய்யமாட்டார்கள்.
யார் என்ன சொன்னாலும் கோத்தபாய ராஜபக் ஷ தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். ஏனென்றால் கடந்த பிர தேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் பொதுஜன பெரமுனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது ஆதரவு வழங்கும் நிலை யில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெறுவது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு வெறும் 37 இலட்சம் வாக்குகளையே அவரால் பெற முடியும். கோத்தபாய ராஜபக் ஷவின் வெற்றிக்கு தமிழ் மக்களும் பங்குதாரர்களாக மாற வேண்டும். தமிழ் மக்கள் அவருக்கு ஆதரவு வழங்காமலேயே அவர் பல்வேறு அதிவிருத்திகளை தமிழ் மக்களுக்கு நிறைவேற்றியுள்ளார். அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்திகளை நிறைவேற்றிக்கொடுத்துள்ளார். அதேபோன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக வந்தால் தமிழர் பிரதேசம் மேலும் அபிவிருத்தியடையும். இம்முறை தமிழர்கள் அனைவரும் ஒருமுறை கோத்தபாய ராஜபக் ஷஷவில் நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்குங்கள்.
கேள்வி: – நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணையொன்று நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் செல்வாரா?
பதில்: – யாழ்ப்பாணத்தில் அவருக்கு எந்தவிதமான வழக்குகளும் இல்லை. கோத்தபாய ராஜபக் ஷ வடக்கு, வன்னி உட்பட அனைத்து தமிழர் பிரதேசங்களுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக சென்று பிரசாரங்களை மேற்கொள்வார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத் தில், கோத்தபாய ராஜபக் ஷ சிறிய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள இராணுவ வீரர்களை தான் ஜனாதிபதியாக வந்த மறுநாள் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார். அவ்வாறே தமிழர்க ளும் சிறுகுற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தால் அவர்களையும் அவர் விடுதலை செய்வார்.
கேள்வி: காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஜனாதிபதியாக கோத்தபாய ராஜ பக் ஷ தெரிவானதும் காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பாக மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து சிறப்பு ஆணைக்குழுவொன்று அமைத்து சிறந்ததொரு தீர்வை வழங்குவார்.
கேள்வி: மலையகத்தில் பல அரசியல்வாதிகள் உள்ளனர். அந்தவகையில் நீங்களும் பொதுஜன பெரமுன சார்பில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியென்ற ரீதியில் அந்த மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்போகின் றீர்கள்?
பதில்: மலையக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பல மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் உள்ளனர். எவ்வளவு அமைச்சர்கள் இருந்தும் மலையகத்தில் வீட்டுப் பிரச்சினையென்பது தீர்ந்தபாடில்லை. தற்போதும் மக்கள் 10அடி அகலம் 10அடி நீளம் கொண்ட லயன் அறைகளில் தான் வசிக்கின்றனர். அத்தோடு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதைவிட கல்விப் பிரச்சினையும் அங்கு உள்ளது. தோட்டப்புற இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழிலில் ஈடுபட முடியாத நிலையுள்ளது. அவர்கள் கடைகளிலும் வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனை நாம் மாற்ற வேண் டும். அவர்களும் அரச வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள வழிவகையேற் படுத்திக்கொடுக்கவேண்டும். அதற்கு முதலில் கல்விப்பிரச்சினையை நாம் சீர்செய்துகொடுக்க எண்ணியுள்ளோம். உதாரணமாக பரீட்சை பெறுபேறுகளை பார்த்தால் வேறுபிரதேசங்களை விட மலையக பிரதேச மாணவர்களின் பெறு பேறுகள் குறைவாகவுள்ளன. அதற்கு நாம் ஒரு தீர்வு வழங்க வேண்டும். கடந்த முறை தோட்ட மக்கள் அனைவ ரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்தனர். ஏனெனில் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு செய்வதாக வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற் போது வாக்குறுதி வழங்கப்பட்டு நான் கரை வருடங்கள் கடந்துள்ளபோதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. இதே வேளை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாதங் கள் கடந்த நிலையில் அது வழங்கப் படவில்லை. ஆனால் அரசாங்க ஊழியர்க ளுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் மலைய கத்தில் பல்வேறு அபிவிருத்திகள், நியம னங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவை தற்போது இடம்பெறவில்லை. கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தெரிவானதும் மலையக மக்களுக்கு என்று விசேட திட்டமொன்றை கொண்டு வரவுள்ளார். அத்துடன் தோட்ட மக்களுக்கான வீட மைப்பு திட்டத்திற்கு புதியதொரு திட்டமொன்றை கொண்டுவருவார். அத்துடன் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவார்.
நேர்காணல் – வீ.பிரியதர்சன்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!