ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தா­வுக்­கான வெற்­றிக்கே உதவும் – மனோ

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது என்று தமிழ் முற்­போக்­கு ­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்­கத்தில் பதி­வொன்றை அவர் இட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஜே.வி.பி. ஒரு அர­சியல் சிறு­பான்மை கட்சி. இன்று ஒப்­பீட்­ட­ளவில் நல்ல கட்­சிதான். அதன் தலைவர் அநுர என் நல்ல நண்பர். அநுர வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டவுடன் அவ­ருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அர­சி­யல்­வாதி நான்தான். இக்­கட்­சியின் அர­சியல் குழு உறுப்­பி­னர்கள் பலர் என் நண்­பர்­கள்தான். இந்த கட்­சிக்கும் ஒரு கறுப்பு பக்க வர­லாறு, ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. மற்றும் இன்­றைய பொதுஜன பெர­முன போன்று இருக்­கி­றது. எனினும் இன்­றைய எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் வர­லாற்­றி­லி­ருந்து விடை தேடக்கூடாது வர­லாற்­றி­லி­ருந்து பாடம்தான் படிக்க வேண்டும்.

ஆனால், இங்கே ஒரு பிரச்­சினை இருக்­கி­றது. ஜே.வி.பி, இன்­றைய போட்­டியில் வெகுதூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்­கி­றது. வெற்றி பெறு­வது சாத்­தி­ய­மில்லை. இந்­நி­லையில் இவர்­க­ளுக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது, சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்­றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது. சஜித், கோத்தா – இரு­வரும் ஐம்­பது விகி­தத்­துக்கு போட்டியிடும் போது, ஜே.வி.பி. ஐந்து விகி­தத்­துக்கு போட்டி இடு­கி­றது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்­கார வார்த்­தை­களை கொண்டு, பூசி மெழு­கு­வது பிழை.

இதை அறி­யாமல், சஜித்­துக்கு போட வேண்­டிய எமது வாக்கில் ஒரே­யொரு விகி­தத்தை நாம் அநு­ர­வுக்கு போட்டு விட்டால், சஜித் தோற்க, கோத்தா வந்து விடுவார். (இத­னால்தான் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் எமக்கு போடா­விட்டால், அவ­ருக்கு போடுங்கள், இவ­ருக்கு போடுங்கள், சஜித்­துக்கு மட்டும் போட்டு விடா­தீர்கள் என மஹிந்த அணி இர­க­சிய அறி­வு­றுத்தல் செய்­கி­றது)

இதற்கு ஒரே வழிதான் உள்­ளது. ஜே.வி.பி, சிங்­கள மக்கள் மத்­தியில் தன் செல்­வாக்கை அதி­க­ரித்து, அதன் பின் எம்­மிடம் வர வேண்டும். ஆனால், அது இன்­னமும் நடை­பெ­ற­வில்லை. மூன்றாம் இடம் என்று சொல்­கி­றோமே தவிர, அவர்கள் சஜித், கோத்­தா­வுக்கு வாக்கு வங்­கி­க­ளிடம் இருந்து வெகுதூரத்தில் இருக்­கி­றார்கள்.

முதலில், ஜே.வி.பி சிங்­கள மக்­க­ளிடம் அடிப்­படை வாக்­கு­களை 35 விகிதம் பெற்றால், நாம் அவர்­க­ளுக்கு மிகுதி தேவை­யான ஒரு 15 விகி­தத்தை கொடுத்து வெற்றி பெற வைக்­கலாம்.

இப்­போது என்­ன­வென்றால் இவர்கள் முதல் அடிப்­படை வாக்­கையே எங்­க­ளிடம் கோரு­கி­றார்கள். இது இப்­போது எம்மால் செய்ய முடி­யாது. அவர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் ஆட்சியை நிறுவும் போது இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் இருக்கவே மாட்டோம். பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் பாராளுமன்றத்தில் வேண்டுமானால், இதுபற்றி யோசிக்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!