மினி சூறாவளியினால் நயினாதீவில் பலத்த சேதம்!

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நயினாதீவு, இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன. ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகளும் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!