உயிரிழந்த இரண்டு மகன்கள்..மாயமான 34 வயது தாய்… ?

கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில் அவர் புகைப்படத்துடன் பொலிஸார் அது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளனர்.டொரண்டோவை சேர்ந்த ஏப்ரல் பர்குள் (34). இவரின் இரண்டு மகன்களும் கடந்த 2014-ல் உயிரிழந்தனர்.இந்நிலையில் பர்குள் கடந்த 22ஆம் திகதி செவ்வாய்கிழமையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

அவர் காணாமல் போன தகவல் குறித்து டொரண்டோ பொலிஸார் தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளனர்.அந்த பதிவில் பர்குள், கடைசியாக செண்ட் குயின் பகுதியில் உள்ள பீட்டர் தெருவில் கடந்த 22ஆம் திகதி செவ்வாய்கிழமை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பர்குளின் உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் சாதாரண உடல்வாகுடன் நீளமான பழுப்பு நிற முடியை அவர் கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் குறித்த தகவல் யாருக்கேனும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!