தேர்தல் விதி மீறல் – ஊடகவியலாளர் உள்ளிட்ட 3 பேர் முல்லைத்தீவில் கைது!

முல்லைத்தீவில், வாக்களிப்பு நிலையத்துக்குள் பபடம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையத்துக்குள் சென்று, வாக்களிப்பு, வாக்குப் பெட்டி, அதிகாரிகளை படம் எடுத்து, இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பாகவே, முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த மேற்படி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வாக்களிப்பு நிலையத்தின் முதன்மை தலைமை தாங்கும் அதிகாரி, உடனடியாக தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் கட்சி ஒன்றின் பிரதேச இணைப்பாளர், வாக்காளர்கள் வரிசையில் நின்ற மக்களை படம் எடுத்த போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, முல்லைத்தீவு பகுதியில் போலி வாக்குப் போடுவதற்கு முற்பட்ட வேளை, முல்லைத்தீவு பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!