குறைபாடுகளை சுட்டிக் காட்டிய சிறுவனுக்கு 24 லட்சம் ரூபாவை பரிசாக வழங்கிய கூகுள் நிறுவனம்!

உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்த Ezequiel Pereira என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து அந்த குறைபாட்டை சரி செய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த சிறுவனுக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!