ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்க முயன்றவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்!

தேனி மாவட்டம் போடியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேட முயன்ற அவரது உறவினரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அங்குள்ள கொட்டகுடி ஆற்றில் மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். நீரோட்டம் சற்று அதிகமாக இருந்த நிலையில் முத்தரசன் என்ற சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுவனின் சித்தப்பா பரமசிவம் என்பவர் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அண்ணன் மகனை தேடும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் முத்தரசனின் சடலம் மீட்கப்பட்டது. பரமசிவத்தை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!