24 மணி நேரத்துக்குள் பதவி விலகுவார் சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலகிக் கொள்வார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொதுஜன பெரமுனவுக்கு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உதவும்.

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு தேவையான, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறவதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்த பின்னர், பதவி விலகுவார்.

அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.

எனினும், இருவருக்கும் இடையிலான முறைப்படியான சந்திப்பு இன்று அல்லது நாளை நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!