சஜித்தை தோற்கடிக்க துணைபோனது கூட்டமைப்பு!

சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போயுள்ளதாக எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறவில்லை. தமிழ் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் புரிந்த ஓர போர்க்குற்றவாளி, இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கும் வரை கோத்தாபய ராஜபக்-ஷவிற்கு வாழ்த்துக் கூற முடியாது. கோத்தாபயவின் பதவிக் காலம் முடிந்தாலும் பரவாயில்லை. அவரின் வெற்றிக்காக தமிழ் மக்கள் வாழ்த்தக் கூடிய மனநிலையிலும் இல்லை. நானும் அந்த மனநிலையில் இல்லை.

சம்பிரதாயம் என வாழ்த்துவதும், அதன் பின்னர், வீழ்வதும், ஓடுவதுமாக இருந்து கொண்டு வாழ்த்த முடியாது. என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!