நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

“எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன்.

அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்“ என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!