ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க: – பிரபல நடிகை கிண்டல்

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க என்று பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 13 பேர் பலியாகினர்.

மக்கள் நடத்திய இந்த போராட்டத்தின் பயனாக தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு கரணமாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக அரசு இது போன்ற முடிவை எடுக்க 13 பேர் தங்கள் உயிரையே கொடுத்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிரியா பவானி சங்கர், இதற்கெல்லாம் அரசு தான் காரணம் என்று தியேட்டர்களில் விளம்பரம் போட்டுவிட வேண்டாம்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டது சரி தான், ஆனால், இதையே காரணமாக வைத்துக் கொண்டு தியேட்டரில் இடைவேளையின் போது, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது அப்படின்னு விளம்பரம் போட்டுவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.மேலும் ஜல்லிக்கட்டுக்கு நீங்கள் போட்டதே போதும், மக்கள் போராடி பெற்ற வெற்றியை தமிழக அரசு தான் போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தது என்று திரையரங்குகளில் ஒரு குறும்படம் போட்டதே போதும்.நேர்மையாக தங்களது உயிரைக் கொடுத்து போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த ஸ்டெர்லைட் விஷயம் இருக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!