“மருந்துப்பொருள் இறக்குமதி விநியோகத்தின் போதான மோசடி தொடர்பில் விசாரணைக்காக குழு”

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டினால் மருந்துப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளின் போது இழைக்கப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் விசேட விசாரணை குழுவொன்று நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், சுதேமருத்துவம் , மகளிர் , சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவருக்கு நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!