சிறுநீரகம் செயலிழந்த மகனை மீட்க தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்!

சேலத்தில், சிறுநீரகம் செயலிழந்த மகனுக்கு அவரது தந்தை தானமாக வழங்கிய சிறுநீரகத்தை பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 32 வயதான சேகர் என்ற நபர், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது தந்தையான அர்ஜுனன் என்பவரே தனது மகனுக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தார்.

இதையடுத்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைவர் பெரியசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த தகவலை சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!