சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்லத் தடை!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாகவே கொழும்பு நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!