நாட்டில் அரசாங்கமே இல்லை என்கிறார் மஹிந்த!

நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ,

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் குழு ஒன்று அமைத்துள்ளோம். அக்குழு ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும். மேலும் ஜனாதிபதியின் அக்கருத்தின் மூலம் நாட்டில் அரசாங்ம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல முடியாது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான அரசாங்கத்ததை அமைக்க வேண்டும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நான் ஹெலிகொப்டரில் பயணித்தமை பற்றியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். எனினும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் முன்னையவர் பதவியில் இருப்பார்.

மேலும் அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்காமலிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணங்களை அடிப்படையாக்கொண்டே நாம் அந்த தீர்மானத்திற்கு வந்தோம். அக்காரணங்களை உரிய சந்தர்பத்தில் தெரிவிப்போம். என்னை விட நாடு பெரியது. ஆகவே சுயநலங்களுக்கு அப்பால் சென்று தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!