அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பை வழங்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் தேவாலயங்களுக்கும் விஷேட பாதுகாப்பை வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடமும் பாதுகாப்புதுறையினரிடமும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் பேராயர் தெரிவித்தார்.

ஏதேனுமொரு வகையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற ஐயப்பட்டாட்டிலேயே நத்தார் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு துறையிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!