யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் கூட்டாக தேடுதல்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய சில பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம், காலை 9 மணி வரை இந்த தேடுதல்கள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு, அஜித் குழு போன்ற வாள்வெட்டுக் குழுக்களை இலக்கு வைத்தே இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் இந்தத் தேடுதல்களின் போது எவரும் கைது செய்யப்படவோ சந்தேகத்துக்குரிய பொருட்கள் கைப்பற்றப்படவோ இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!