கூடுதல் வெங்காயம் தராததால் உணவகத்தை அடித்து நொறுக்கிய கும்பல்!

கேரளாவில் ஓட்டலில் கூடுதல் வெங்காயம் அளிக்காததால் ஆத்திரமடைந்த கும்பல் பொருள்களை சூறையாடியது. திருவனந்தபுரம் கய்தா முக்கு என்ற இடத்தில் உள்ள ஹோம்லி மீல்ஸ் உணவு விடுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையுடன் வந்து அசைவ உணவு சாப்பிட்ட 3பேர், கூடுதல் வெங்காயம் கேட்டனர். ஆனால் ஊழியர்கள் தர மறுத்ததால், வெளியேறி சென்ற அந்த கும்பல் நண்பர்களை அழைத்து வந்து பொருள்களை நொறுக்கி விட்டு தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி பிரிவான டிஒய்எப்ஐ மீது உணவக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அந்த அமைப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதேநேரத்தில் புகாரின்பேரில் சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!