சாதாரணமாக இருந்த வீட்டுக்குள் ரகசிய அறையில்…இருந்தது என்ன..?

தமிழகத்தில் திமுக பிரமுகரின் வீட்டில் உள்ள ரகசிய அறையில் குவியல் குவியலாக பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளது.திருப்பூரின் அவினாசி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோவின் மகன் ஆனந்தன். இவர் தி.மு.க-வின் அன்னூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.ஆனந்தன் வடவள்ளியில் ஒரு வீடு வாங்கி அதை சேக் மற்றும் ரசீத் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.இதனிடையில் பொலிஸாருக்கு ஆனந்தன் தவறான செயலில் ஈடுவதாக தகவல் வந்ததையடுத்து அவர் வீட்டுக்கு சென்றனர்.

சாதாரணமாக இருந்த அந்த வீட்டில் ஒரு ரகசிய அறை இருந்தது, அங்கு கத்தை கத்தையாக பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்மதிப்பிலான பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 667 காகித ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.அதாவது மேலடுக்கில் மட்டும் பணத்தை வைத்துவிட்டு, அதற்குக் கீழ் காகித பண்டல்களை வைத்துள்ளனர்.

தங்களிடம் முதலீடு செய்தால், அதை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை வாங்கி கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்து வந்துள்ளார் ஆனந்தன்.தற்போது தலைமறைவாக உள்ள ஆனந்தனை பொலிஸார் தேடி வருகிறார்கள்.அவர் ஏற்கனவே கடந்த 2011ல் ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் விடுதலை ஆனவர் எனவும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!