சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அரச காணி!

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச காணியை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று ஜே.வி.பி. ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எந்தவித விலைமனுக்கோரலும் இல்லாது இவ்வாறு குத்தகைக்கு வழங்க அமைச்சரவையில் தனிப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்தள விமான நிலையத்தையும் சர்வதேச நிறுவனமொன்றுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானம் எடுக்கின்றதென்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச நிலத்தை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதால் நாட்டிற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லையென அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக மக்கள் அதிருப்தி அடையத் தேவையில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!