மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள ஐதேக தயார்!

மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது என கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறை தொடர்பாக சிக்கல்கள் பல இருப்பதாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது. இதன்போது பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதென்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் எந்தவொரு கட்சிக்கும் சுயாதீனமான அதிகாரத்தை நிலைநாட்டுவது முடியாத ஒருநிலை உட்பட பல பிரச்சினைகளை எழுந்துள்ளன. இது தொடர்பாக தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை மாகாண சபை தேர்தல் பழைய முறைப்படியே செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!