உயிரிழந்த மாணவிகளின் சடலங்கள் கொழும்பு வந்தன!

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் மூவரினதும் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சடலங்கள் கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

டோகா மற்றும் தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதுவராலயங்கள் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான செலவுகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது.

அஸர்பைஜானில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவிகள், தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் கடந்த ஒன்பதாம் திகதி மாணவிகள் மூவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!