பிரான்ஸ் நாட்டில் கடவுச்சொல்லே இல்லாமல் பெண்ணிடமிருந்து ரூ.1,50,000 கொள்ளை!

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய பெண் பறிகொடுத்த டெபிட் மற்றும் கிரெடி கார்டிலிருந்து, கடவுச் சொல்லே இல்லாமல் 1,50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த நேகா சந்திரா என்ற பெண், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது அவரது பை திருடப்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே 3 தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடவுசொல்களே இல்லாமல் வங்கி கணக்கினை ஹேக் செய்து பணம் கொள்ளையடித்து இருக்கும் இந்த சம்பவம் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இதுதொடர்பாக வங்கியில் புகாரளித்தும், ஆர்பிஐ விதிகளின்படி பணம் இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!