5.9 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை – மருத்துவர்கள் அதிர்ச்சி!

பெங்களூருவில் 5 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள வானிவிலாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி காலை 5 கிலோ 900 கிராம் எடையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. டார்ஜிலிங்கை பூர்விகமாகக் கொண்ட யோகேஷ் மற்றும் சரஸ்வதி தம்பதியினருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. கர்ப்ப காலத்தின் போது சரஸ்வதி 80கிலோ எடைக் கொண்டிருந்ததால் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால், 5 கிலோவுக்கு அதிகமான எடையுடன் குழந்தை பிறந்தது தங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாகவும், அப்பகுதியில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை இது தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரஸ்வதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!