அவுஸ்ரேலியாவில் மாயமானதாக கூறப்பட்ட கனேடிய விமானம் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனதாகக் கூறப்பட்ட விமானம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் அல்பயின் பிராந்தியத்தில் இன்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த கனடாவுக்கு சொந்தமான விமானம் காணாமல் போயிருந்தது. இந்நிலையில், குறித்த விமானம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த வெடிப்பினால் அவ்விமானத்தில் இருந்த மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீயணைப்புக்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை காவி சென்ற குறித்த விமானமானது என்ன காரணத்தினால் வெடிப்புக்குள்ளானது என இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய விமானப்போக்குவரத்து துறையின் பேச்சாளர், குறித்த விமானம் தீயணைப்பு திரவங்களை விசிறுவதற்காக ஓர் பள்ளத்தாக்கிற்கு சென்றதாகவும் அது மீண்டும் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் மாயம்!

அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்று(வியாழக்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பு இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானங்கள் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அதில் ஒன்று காணாமல் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!