கிண்டலடித்ததால் பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 4-ஆவது குழந்தை பிறந்ததால் கிண்டலுக்கு ஆளான தம்பதி, பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில், பச்சிளம் குழந்தையை ஒரு தம்பதி அனாதையாக விட்டுச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகின.

குறித்த குழந்தையை மீட்ட தேவாலய நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். குழந்தையை விட்டுச் சென்ற திருச்சூர் மாவட்டம் எடப்பள்ளியைச் சேர்ந்த பிட்டோ, பிரபிதா தம்பதியை கண்டறிந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தக் காலத்தில் 4 குழந்தைகள் பெற்றுள்ளீர்கள் என உறவினர்கள் கிண்டல் செய்ததால் இவ்வாறு செய்ததாக அந்த தம்பதி வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!