சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவிக்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பதவிக்கு புதிய அதிகாரியை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தமது திணைக்கள அதிகாரியொருவருக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே, சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
அதற்காக, சிறைச்சாலை திணைக்களத்தில் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் போட்டி நிலவுவதாக கூறப்படுகின்றது.
மேலும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவியானது, நிர்வாக சேவைக்கு உரிய பதவி என்றும், அதற்கு தமது அதிகாரியொருவரே நியமிக்கப்படவேண்டும் என்று , நிர்வாக சேவை அதிகாரிகளின் கருத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சின் தகவல் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!