காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை உடன் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “காணாமல்போனோரின் உறவுகளுக்கான பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய பணியை செய்து வரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரை சந்தித்தேன்.இலங்கையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!