சிங்கள மக்களை தம்வசம் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சி!

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால், அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவும் சிங்கள மக்களை தம்வசம் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சியாகவுமே நாம் கருதுகின்றோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் மக்களை நெருக்கமாக்கும் நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் முன்னெடுத்தாகவும் தற்போதைய ஆட்சி தமிழ், சிங்கள மக்களை தூரமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

, “இன்று இனவாதக் கருத்துக்களை மட்டுமே அரசாங்கம் பரப்பி வருகின்றது. சகல மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை நாம் அமைத்துக் கொடுத்தோம். ஆனால் ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இனவாத அரசியலைச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்படக் கூடாது என அறிவித்துள்ளனர். ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு எந்தவொரு தடையையும் நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்யவில்லை.

சிங்கள மக்களும் அவ்வாறு தனித்துவமான நிலைமைகளை எதிர்பார்க்கவும் இல்லை. நாம் சிங்கள, தமிழ் மக்களின் நெருக்கமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ், சிங்கள மக்களை தூரமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால் அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்துக்கொள்ளவும் சிங்கள மக்களை தம்வசம் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சியாகவுமே நாம் கருதுகின்றோம்

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை ராஜபக்ஷ அரசாங்கம் தடுப்பது தமிழ் மக்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்தவா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!