விமான சேவையின் முன்னாள் அதிகாரியை கைது செய்ய உத்தரவு

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக பிடியாணை ஒன்றை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரையின் படி ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு விமானங்களை கொள்வனவு செய்வதுடன் தொடர்புடைய பரிவர்த்தனையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!