தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்றவே அரசு முயற்சி – அனுர

தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்றும் நோக்கத்துடனே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை கோருவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற பிரச்சார நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்தோடு ,தற்போதைய அரசாங்கம் பல பாதகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச சொத்துக்களையும் விற்பனை செய்வார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் ,வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் இந்த மோசமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது என்றும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!