விக்கி தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி! – நாளை உடன்பாடு

??????????????????????????????????????????????????????????
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கிடையில், நாளை உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் இதுவரை எதுவித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!