பாலியல் குற்றங்கள் – முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டம்!

2020ம் ஆண்டின், முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஸ்பிரயோகங்கள், 54 சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பன பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றில் நேற்று அரசாங்கத்தின் பிரதம கொரடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மட்டக்களப்பு பிரதேசத்திலேயே நிகழ்ந்துள்ளன. 44 பாலியல் வன்புணர்வுகள், கடுமையான பாலியல் குற்றம் 8 மற்றும் 17 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை 2012 முதல் 2020 வரையான பகுதியில் 11,998 பாலியல் வன்புணர்வுகள், கடுமையான பாலியல் குற்றங்கள் 4,806 மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் 5,891 என்பன பதிவாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!