நெடுங்கேணியில் கஞ்சா தோட்டம்!

வவுனியா வடக்கு- நெடுங்கேணி காட்டுப் பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடி படையினரால் நேற்று முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டது.

அரை ஏக்கர் பரப்பளவில், குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!