சமல் ராஜபக்சவை கொல்லப் போவதாக குறுந்தகவல் அனுப்பியவர் கைது

அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்யப் போவதாக அமைச்சரின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பிய ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் இன்று கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய உள்ளதாக அமைச்சருக்கு அனுப்பப்பட்ட குறித்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இந்த நபரால் இதுபோன்ற குறுந்தகவல்கள் வேறு நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சந்தேகநபர் தற்போதைய நிலையில் தடுப்பு உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!