நாடகக்காதல்..குளிர்பானத்தில் மயக்க மருந்து.. சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கிருஷ்ணகிரியில் பேரதிர்ச்சி..!! கைதான 16 வயது கொடூரன்.!!

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகேயுள்ள திம்மசந்திரம் கிராமத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுவன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் இப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவியை நாடககாதலால் வீழ்த்தி காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் காலை மற்றும் மாலை வேளையில் சந்திப்பது வழக்கமான நிகழ்வாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி காலை நேரத்தில் இருவரும் வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தில் வைத்து பேசிக்கொண்டு இருந்த சமயத்தில், மாணவரின் நண்பர்களான ஜோடுகொத்தூர் கிராமத்தை சார்ந்த ராஜா (வயது 26) மற்றும் திம்மசந்திரம் மஞ்சுநாத் (வயது 22) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்த நண்பர்களிடம் காதலியை அறிமுகம் செய்த மாணவன் என நால்வரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில், பின்னர் மாணவிக்கு குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளனர். காதலனை நம்பி மனைவி குளிர்பானத்தை குடித்துள்ளார். மாணவிக்கு தெரியாமல் மயக்க மருந்து கலந்திருந்த நிலையில், குளிர்பானத்தை குடித்ததும் சிறுமி மயங்கியுள்ளார்.

பின்னர் காமுகன்கள் மூவரும் சேர்ந்து சிறுமியை பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதர்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை மயக்கம் தெரியும் தருவாயில் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்ததும் தன்னிலை அறிந்த சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது தாயாரிடம் நடந்ததை கூறி கதறியளவே, இதனை கேட்டு அதிர்ச்சியான தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுக மாணவனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ராஜா, மஞ்சுநாத் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!