சாரதி குத்துக்கரணம் – சிக்குகிறார் சம்பிக்க!

இராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு வாகன விபத்து இடம்பெற்றபோது, அப்போதைய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தை தான் செலுத்தவில்லை என, அவரது வாகன ஓட்டுனர் திலும் துசித குமார நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த விபத்து குறித்து சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக சாரதி தாமே வாகனத்தை செலுத்தியதாக கூறியிருந்தார். எனினும் தற்போது சாரதியின் இந்த சாட்சியத்தை அடுத்து, சம்பிக்க ரணவக்க மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!