ஷானி அபேசேகரவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மேலும் இரு உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மார்ச் மாதம் மூன்றாம் திகதி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உதவி காவல்துறை அதிகாரி பீ.எஸ் திசேர மற்றும் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!