நடக்க முடியாமல் தவித்த சிறுவன்: தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவில் 3 வயது சிறுவன் உடலுக்குள் 11 ஊசிகள் இருப்பது ஸ்கேன் மூலம் தெரிந்த நிலையில் அனைத்தையும் வெளியில் எடுக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்தின் வீபநகந்தலா மண்டல் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஷோக், அன்னபூர்ணா. இவர்களுக்கு லோக்நாத் (3) என்ற மகன் உள்ளான். லோக்நாத்தை கடந்த வாரம் அன்னபூர்ணா குளிப்பாட்டும் போது அவன் தசையில் இருந்து ஒரு ஊசி வெளியில் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின்னர் லோக்நாத் நடப்பதில் சிரமம் ஏற்பட்டு திணறினான். இதையடுத்து பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு லோக்நாத் உடலுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல, 11 ஊசிகள் அவனின் இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் சிறுநீரகங்களுக்கு அருகில் இருந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து சில ஊசிகளை மருத்துவர்கள் லோக்நாத் உடலில் இருந்து வெளியில் எடுத்தனர். ஆனால் மற்ற ஊசிகளை இப்போது எடுக்க முடியாத நிலை உள்ளதால் பிறகு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி லோக்நாத்தின் பெற்றோர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் தங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள அலிவேலம்மா மற்றும் அஞ்சி ஆகிய இருவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இருவரும் தான் லோக்நாத்தை அடிக்கடி தங்கள் வீட்டுக்கு விளையாட அழைத்து செல்வார்கள், அவர்கள் மூலம் ஊசிகள் லோக்நாத் உடலுக்குள் செலுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவ அறிக்கை வந்த பின்னரே இந்த விடயத்தில் விசாரணையை தொடங்கமுடியும் என பொலிசார் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!