தேர்தல்களை ஒருபோதும் பிற்போட மாட்டோம். பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள், விசேட ஆசிரியர்கள், கேலிச் சித்திர ஓவியர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
“பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!