மார்ச் 26 வரை அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இல்லை!

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.பதுளையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலில் பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையில் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும். அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் மார்ச் 26ம் திகதி வரை அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்துவதில்லை என்று அறிவித்துள்ளன. பொது மக்கள் தாமே தம்மை தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ ஆலோசனை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று தேசப்பிரிய கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!