கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு சஜித் அவசர கோரிக்கை!

பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலவரத்தை கருத்திற் கொண்டு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலை விட நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பே முக்கியமானது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!