இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – உறுதி!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து திரும்பிய 44, 43 வயதுடைய இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை 7 இலங்கையர்கள் கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக குணமடைந்த சீனப் பெண்ணுடன் சேர்த்து இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!